வாஷிங்டன் : செயற்கை நுண்ணறிவு தளங்களை பயன்படுத்துபவர்களது மூளையின் சிந்திக்கும் ஆற்றல் 47% குறைந்துவிட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள தனியார் பல்கலைக்கழகமான massachusetts institute of technology செயற்கை நுண்ணறிவு தலமான chatgpt பயனர்களின் மூளையை ஆராய்ந்து, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. கடந்த 4 மாதங்களாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் chatgpt பயன்படுத்துபவர்களின் மூளையின் சிந்திக்கும் ஆற்றல் 47% குறைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சில நிமிடங்களுக்கு முன்பு எழுதிய ஒரு வாக்கியத்தை பலருக்கும் நினைவில் வைத்து கொள்ள முடியவில்லை என்றும் அதே வேளையில் AI பயன்படுத்தாமல் எழுதியவர்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.