Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விவசாய பயன்பாட்டிற்கு மண் எடுக்க அனுமதித்த முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு கருணாஸ் நன்றி

சென்னை: விவசாய பயன்பாட்டிற்கு மண் எடுக்க அனுமதித்த முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு கருணாஸ் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் வெளியிட்ட அறிக்கை: மாநிலமெங்கும் உள்ள நீர்த்தேக்கங்கள், ஏரிகள், கண்மாய்கள், குளங்கள், கால்வாய்களிலிருந்து, வட்டாட்சியர் அளவிலேயே எளிய முறையில் அனுமதி பெற்று, கட்டணமின்றி, விவசாய பயன்பாட்டிற்கும் பானைத் தொழில் செய்வதற்கும் மண், வண்டல் மண், களிமண் வெட்டி எடுக்க அனுமதித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது வரவேற்கத் தக்கது.

நீண்டகால விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு முக்குலத்தோர் புலிப்படை கட்சி சார்பின் எனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்! மேற்கண்ட அறிவிப்பால், விவசாயிகளுக்கு மட்டுமின்றி கண்மாய்கள், குளங்கள், ஏரிகள், உள்ளிட்டவைகளை தூர்வாரும் நடைமுறை எளிமையாகும், விவசாயிகளின் தேவையான பயன்பாட்டிற்கு மண்ணும் எடுத்துக்கொள்ளலாம். மண் எடுப்பதால், நீர்த்தேக்கங்கள் யாவும் மேற்கண்ட செயல்முறையில் எளிதாக தூர்வாரப்படும் சூழல் உருவாகும். இது ஒன்றையொன்று சார்ந்த ஆக்கப்பூர்வமான செயல்பாடு! தமிழ்நாடு முதலமைச்சரின் இந்த சிறப்பான அறிவிப்பால், விவசாயிகள் பயன்பெறுவதோடு, நாட்டில் உள்ள நீர்நிலைகளின் கொள்ளளவை உயர்த்தி அதிக மழைநீரைச் சேமித்திடவும், மண்வளம் காக்கவும் வழிவகை செய்யும்.