வேளாண் பட்ஜெட் அறிவிப்பின்படி, தமிழ்நாடு முந்திரி வாரியம் எனும் தனி வாரியம் உருவாக்கம்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு
சென்னை: முந்திரி சாகுபடி தொழிலாளர்கள் நலனுக்காக தமிழ்நாடு முந்திரி வாரியம் உருவாக்கப்பட்டள்ளது என எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். முந்திரி சாகுபடி பரப்பு, உற்பத்தியை மேலும் அதிகரிக்க முந்திரி வாரியத்தை தமிழ்நாடு அரசுஉருவாக்கியது. வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் செயலாளரை தலைவராக கொண்டு நிர்வாகக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. கடலூரை தலைமையிடமாக கொண்டு முந்திரி வாரியத்துக்கு தலைவராக உழவர் நலத்துறை அமைச்சர் செயல்படுவார் என தெரிவித்தார்.