Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

இளங்கலைப் பட்டப் படிப்புகளில் சேர வயது வரம்பு தளர்வு

தமிழக கலை அறிவியல் கல்லுாரிகளில் இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான வயது வரம்புத் தளர்வை அதிகப்படுத்தி தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 1,626 கலை அறிவியல் கல்லுாரிகள் உள்ளன. இக்கல்லுாரி களில் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான வயது வரம்பாகப் பொது பிரிவினருக்கு 21 வயதும், எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குக் கூடுதலாக 3 ஆண்டுகள் தளர்வுடன் 24 வயதும் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், தற்போது இளங்கலைப் பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெற வயது வரம்பு 40 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. எஸ்.சி.,-எஸ்.டி., மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மேலும் ஐந்து ஆண்டுகள் வயது வரம்புத் தளர்வும், பெண்களுக்கு மூன்று ஆண்டுகள் வயது வரம்புத் தளர்வும் அளிக்கப்பட்டுள்ளது. இது, நடப்பாண்டு முதலே அமலுக்கு வந்துள்ளது. அதன்படி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் பட்டப் படிப்புகளில் பொதுப் பிரிவினர் சேர்வதற்கான உச்ச வயதுவரம்பு 40 ஆகவும், மாற்றுத்திறனாளிகளுக்கு 45 ஆகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினர் மற்றும் பெண்களுக்கு 43 ஆகவும் நிர்ணயம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.