Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆப்கான் நிலநடுக்கத்தில் 800 பேர் பரிதாப பலி.. 2500 பேர் படுகாயம் : டெல்லி உள்பட வட மாநிலங்களில் நில அதிர்வு!!

புதுடெல்லி : பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையை மையமாகக் கொண்டு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 800 பேர் பலியான நிலையில் 2500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில், நேற்று நள்ளிரவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் மலைத்தொடரில் உள்ள அசதாபாத் பகுதியை மையமாகக் கொண்டு, சுமார் 29 கிலோமீட்டர் ஆழத்தில் உருவாகியுள்ளது.

இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், லாகூர், பெஷாவர் மற்றும் இந்தியாவின் டெல்லி, பஞ்சாப், அரியானா, ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட வட மாநிலங்கள் மற்றும் தஜிகிஸ்தானின் சில பகுதிகளிலும் கடுமையான நில அதிர்வுகள் உணரப்பட்டன.சுமார் 5 முதல் 7 விநாடிகள் வரை பூமி அதிர்ந்ததால், பீதியடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த உடனடித் தகவல்கள் எதுவும் வெளியாக வில்லை.

இருப்பினும், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையில் 800 பேர் பலியானதாகவும், 2500க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள், தங்கள் வீடுகளில் மின்விசிறிகள் மற்றும் நாற்காலிகள் போன்றவை பயங்கரமாக ஆடிய காணொளிகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். மேலும், தொடர்ச்சியான பின் அதிர்வுகளுக்கு வாய்ப்புள்ளதால், மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.