டெல்லி: ஏசி பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு, தற்போது வழங்கப்படும் வெள்ளை நிற போர்வைக்குப் பதிலாக ராஜஸ்தானின் பாரம்பரிய 'சங்கனேரி' போர்வைகளை வழங்கும் திட்டத்தை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்தார். பயணிகளுக்கு வழங்கப்படும் போர்வைகள் சரியாக சுத்தம் செய்யப்படுவதில்லை என்ற புகார்களுக்கு மத்தியில், இத்திட்டம் சோதனை முறையாக ஜெய்ப்பூர்-அசர்வா எக்ஸ்பிரஸ் ரயிலில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
+
Advertisement