7 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி: பிரபல பாப் பாடகி விவாகரத்து: இரு மகள்கள் உள்ள நிலையில் திருப்பம்
லாஸ் ஏஞ்சல்ஸ்: திருமணமாகி ஏழு ஆண்டுகளான நிலையில், பிரபல பாப் பாடகி கிரிஸ்டினா பெர்ரி தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். பிரபல அமெரிக்க பாப் பாடகியான கிரிஸ்டினா பெர்ரி, தனது கணவர் பால் காஸ்டபைலை விவாகரத்து செய்யக்கோரி லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்துகொண்ட இந்த தம்பதியினர், ஏழு வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு பிரிய முடிவு செய்துள்ளனர். தங்களுக்கு இடையே தீர்க்க முடியாத கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாக கிரிஸ்டினா பெர்ரி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தம்பதியினருக்கு கார்மெல்லா ஸ்டான்லி (7) மற்றும் பிக்ஸி ரோஸ் (3) என இரண்டு மகள்கள் உள்ளனர். மேலும், தனது கணவரான பால் காஸ்டபைலுக்கு ஜீவனாம்சம் வழங்குவதற்கான உரிமையை நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், தங்களின் இரண்டு மகள்களையும் இருவரும் கூட்டாக கவனித்துக்கொள்ளும் வகையில் கூட்டுப் பாதுகாவலர் உரிமையை வழங்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். கடந்த 2020ம் ஆண்டு கருச்சிதைவு மற்றும் பிரசவத்தின்போதே குழந்தை இறந்து பிறந்தது போன்ற துயரங்களையும் இந்த தம்பதியினர் சந்தித்தது குறிப்பிடத்தக்கது. இந்த விவாகரத்து குறித்து கிரிஸ்டினா பெர்ரி மற்றும் அவரது கணவர் தரப்பில் இருந்து இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
