Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சென்னையில் ஒரே நாளில் மாயமான 5 சிறுவர், சிறுமியர் மீட்பு: போலீசாருக்கு கமிஷனர் பாராட்டு

சென்னை: விருகம்பாக்கம் பகுதியில் 16 வயது சிறுமி மற்றும் 15 வயது சிறுமி ஆகியோர் கடந்த 10ம் தேதி மாயமாகினர். இதுகுறித்து விரும்கம்பாக்கம் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். அதேபோல், விரும்பாக்கத்தில் 15 வயது மாணவன் ஒருவன் கடந்த 10ம் தேதி மாயமானான். புகாரின் பேரில், போலீசார் விசாரித்தனர். அதில், 2 சிறுமிகள் தன்னுடன் படித்த மற்றொரு மாணவி வீட்டில் இருந்தது தெரியவந்தது. அவர்களை மீட்டு விசாரணை நடத்திய போது, 16 வயது சிறுமிக்கு கடந்த 10ம் தேதி பிறந்த நாள், அன்றை தினம் தனது அப்பா திட்டியதால் கோபித்து கொண்டு தனது தோழியுடன் சக மாணவி வீட்டில் தங்கியது தெரியவந்தது. உடனே போலீசார் 2 சிறுமிகளையும் அவர்கள் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அதேபோல் மாயமான மாணவன் வடபழனியில் உள்ள பார்க் ஒன்றில் அமர்ந்து இருந்தது தெரியவந்தது. அவனையும் மீட்டு பற்றோரிடம் ஒப்படைத்தனர்.

அண்ணா சதுக்கம் போலீசார் கடந்த 10ம் தேதி இரவு வாலாஜா சாலையில் ரோந்து சென்றபோது, சிறுமி மற்றும் சிறுவன் ஒருவர் தனியாக அமர்ந்து இருந்தனர். விசாரணையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி அவரது தம்பியான 12 வயது சிறுவன் என்பதும், தனது தந்தை மற்றும் பெரியம்மா கடுமையாக பேசியதால் வீட்டை விட்டு வெளியேறி சென்னைக்கு வந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் இருவரையும் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். ஒரே நாளில் மாயமான 3 சிறுமிகள் மற்றும் 2 சிறுவர்களை விரைந்து மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசாரை கமிஷனர் அருண் பாராட்டினார்.