காஞ்சிபுரம்: மாங்காட்டில் போதை மறுவாழ்வு மையத்தில் காவலாளியை தாக்கி விட்டு 35 பேர் தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாங்காடு அடுத்த சக்கரா நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான போதை மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மையத்தில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். மையத்தில் இருந்த 35 பேர் திடீரென ஒன்று கூடி காவலாளியை தாக்கி விட்டு போதை மறுவாழ்வு மையத்தில் இருந்து தப்பி சென்றனர்
போதை மறுவாழ்வு மையத்தில் இருந்து ஒரே நேரத்தில் 35 பேர் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மையத்தில் சிகிச்சை என்ற பெயரில் கொடுமைப்படுத்தியதால் தப்பினார்களா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என கேள்வி எழுந்துள்ளது. தொடந்து இந்த மாங்காடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.