Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

30 மீனவர்களுக்கு இலங்கை கோர்ட் ரூ.22.10 லட்சம் அபராதம் விதிப்பு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 8ம் தேதி ஹரிகிருஷ்ணன், ஜோசப், நெப்போலியன், ஜெபமாலை ராஜா ஆகியோருக்கு சொந்தமான 4 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், 4 விசைப்படகுகளையும் சிறைபிடித்தனர். அதில் இருந்த 30 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். நேற்றுடன் காவல் முடிந்ததால் 30 மீனவர்களும் தலைமன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அதில் 26 மீனவர்களுக்கு இலங்கை மதிப்பில் தலா ரூ.2.50 லட்சம் அபராதமும், 2வது முறையாக சிறைப்பிடிக்கப்பட்ட 4 மீனவர்களுக்கு தலா ரூ.2.75 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மொத்த அபராதம் இந்திய மதிப்பில் ரூ.22.10 லட்சம் ஆகும். அபராதம் செலுத்த தவறினால் தலா 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.