Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தீபாவளி பண்​டிகையை முன்னிட்டு; அக்டோபர் 1 முதல் 12,000 சிறப்பு ரயில்​கள்

புதுடெல்லி: தீபாவளி மற்​றும் சாத் பண்​டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இதை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது குறித்து ஒன்றிய ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் கூறிய​தாவது: தீபாவளி மற்​றும் சாத் பண்​டிகை காலத்​தில் ரயில்​களில் கூட்ட நெரிசலை குறைப்​ப​தற்​காக 12,000 சிறப்பு ரயில்​களை ரயில்வே இயக்க உள்​ளது. இதன் மூலம் கூடு​தலாக 3 கோடி பேர் பயணம் செய்​ய​லாம். இது, ஆஸ்திரேலி​யா​வின் மக்​கள் தொகையை விட அதி​க​மாகும். இந்த சிறப்பு ரயில்​கள் அக்​டோபர் 1 முதல் 45 நாட்​களுக்​கும் மேலாக இயக்​கப்​படும்.

தவிர கடைசி நேர நெரிசலை தவிர்க்க முன்​ப​திவு தேவை​யில்​லாத முற்றிலும் பொது பெட்​டிகளை கொண்ட 150 ரயில்​கள் தயார் நிலை​யில் வைக்​கப்​படும். கடந்த 23ம் தேதி வரை 10,000 சிறப்பு ரயில்​கள் அறிவிக்​கப்பட்​டுள்​ளன. தேவை​யின் அடிப்​படை​யில் கூடு​தல் ரயில்​கள் அறிவிக்கப்படும். 70 ரயில்வே கோட்​டங்​களில் 29ல் 90 சதவீதத்​திற்கு மேல் நேரம் தவறாமை எட்​டப்​பட்​டுள்​ளது. வந்தே பாரத் படுக்கை வசதி கொண்ட ரயில் தயார் நிலை​யில் உள்​ளது. இதன் மற்​றொரு ரயில் அக்டோபர் 15ம் தேதிக்​குள் வந்து விடும். இவ்​வாறு கூறி​னார்.