Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் பிரசித்தி பெற்ற காந்தி காய்கறி மார்க்கெட் உள்ளது. இப்பகுதியில் விவசாயிகள் தாங்கள் பயிரிடும் காய்கறிகளை இந்த மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இவற்றை உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் வாங்கி சென்று மொத்தம் மற்றும் சில்லறையாக விற்பனை செய்கின்றனர். இந்நிலையில், ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள தேவதத்தூர், அம்பிளிக்கை, கள்ளிமந்தையம், சத்திரப்பட்டி, விருப்பாச்சி, வடகாடு, பால்கடை, பெத்தேல்புரம், கண்ணனூர் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட தக்காளி, தற்போது அறுவடைக்கு வந்துள்ளது.

இதனால், ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் வரத்து அதிகரித்துள்ளது. தவிர கர்நாடகா, ஆந்திராவை சேர்ந்த வியாபாரிகள், தங்களுக்கு தேவையான தக்காளியை உள்ளூரிலேயே கொள்முதல் செய்கின்றனர். வரத்து அதிகரித்த நிலையில், வியாபாரிகள் வரத்து குறைந்ததால், தக்காளி விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த வாரம் 14 கிலோ தக்காளி பெட்டி ரூ.100 முதல் 150 வரை விற்பனையானது. தற்போது ரூ.50 முதல் 80 வரையே விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.