Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கேரள புதிய கவர்னர் பதவி ஏற்றார்

திருவனந்தபுரம்: கேரள கவர்னராக இருந்த ஆரிப் முகம்மது கான் பீகார் மாநில கவர்னராகவும், பீகார் கவர்னராக இருந்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் கேரள கவர்னராகவும் சமீபத்தில் மாற்றப்பட்டனர். இந்தநிலையில் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் கேரள கவர்னராக இன்று பதவி ஏற்றார். காலை 10.30 மணியளவில் திருவனந்தபுரத்தில் உள்ள கவர்னர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி நிதின் மதுக்கர் ஜாம்தார் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த விழாவில் கேரள முதல்வர் பினராயி விஜயன், சபாநாயகர் ஷம்சீர், எதிர்க்கட்சித் தலைவர் சதீசன் மற்றும் அமைச்சர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நேற்று மாலை திருவனந்தபுரம் வந்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் மற்றும் அவரது மனைவி அனகா அர்லேக்கர் ஆகியோருக்கு விமானநிலையத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.