Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

நாமக்கல் மாவட்டத்தில் கத்தியால் வெட்டப்பட்டு பலியான சிறுமியின் பெற்றோருக்கு ரூ.3 லட்சம்: முதல்வர் உத்தரவு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், சத்திநாயக்கன்பாளையம் கிராமம், குடித்தெருவை சேர்ந்த செந்தில்குமார் கடந்த 27.07.2024 அன்று அவரது வீட்டிற்கு அருகில் வசிக்கும் சிறுமி தஸ்மிதா (வயது 10), தங்கராசு (வயது 50) மற்றும் முத்துவேல் (வயது 35) ஆகிய மூவரையும் கத்தியால் வெட்டிய சம்பவத்தில் பலத்த காயமடைந்த சிறுமி தஸ்மிதா, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர் நேற்று உயிரிழந்தார் என்ற செய்தியை கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இந்த சம்பவத்தில் காயமடைந்து சேலம் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் தங்கராசு மற்றும் முத்துவேல் ஆகிய இருவருக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். இந்த சம்பவத்தில் உயிரிழந்த சிறுமி தஸ்மிதாவின் பெற்றோருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது பெற்றோருக்கு ரூ.3 லட்சமும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.