Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

இந்தியாவுக்கான எனது கடைசி போட்டி இதுதான்: போபண்ணா உருக்கம்

பாரிஸ்: 2024 பாரிஸ் ஒலிம்பிக் ஜூலை 28 அன்று நடந்த ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் போபண்ணா மற்றும் என் ராம் பாலாஜி ஜோடி பிரெஞ்சு ஜோடியான எட்வர்ட் ரோஜர்-வாசெலின் மற்றும் கேல் மான்பில்ஸ் ஜோடியிடம் தோல்வியடைந்தது. இதையடுத்து இந்திய டென்னிஸில் இருந்து போபண்ணா ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் \”நாட்டுக்கான எனது கடைசி நிகழ்வாக இது நிச்சயம் அமையும். நான் எங்கே இருக்கிறேன் என்பதை நான் முழுமையாக புரிந்துகொள்கிறேன், அது போகும் வரை டென்னிஸ் சுற்றுகளை ரசிக்கப் போகிறேன்.

நான் இருக்கும் இடத்திற்கு இது ஏற்கனவே ஒரு பெரிய போனஸ். இரண்டு தசாப்தங்களாக நான் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவேன் என்று நினைக்கவே இல்லை. 2002 முதல், நான் அறிமுகமாகி 22 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவதைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன்’’ என்றார். போபண்ணா தனது வயதின் காரணமாக இந்தியாவுக்காக டேவிஸ் கோப்பையில் இனி விளையாடப் போவதில்லை என அறிவித்து இருந்தார். தற்போது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், ஒலிம்பிக் தொடர் ஆகியவற்றில் இருந்தும் ஒட்டுமொத்தமாக ஓய்வை அறிவித்து இருக்கிறார்.