மும்பை: மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலைய 27வது ஓடுபாதையில் நேற்று ஏர் இந்தியா விமானம் புறப்படும்போதே, அதே ஓடுபாதையில் இண்டிகோ விமானம் தரையிறங்கியதால் பரப்பரப்பு நிலவியது. அலட்சியமாக செயல்பட்ட விமான நிலைய அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். விசாரணை நடத்த விமான போக்குவரத்து இயக்குநரகம் ஆணையிட்டுள்ளது. சம்பவத்தில் நல்வாய்ப்பாக பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
Advertisement