Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கொடுத்த காச என்ன பண்ணீங்க கூட்டம் எங்க? நடுரோட்டில் அதிமுக மாஜி உர்ர்ர்ர்ர்ர்

திருவண்ணாமலை மாவட்டம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் நேற்று முன்தினம் தண்டராம்பட்டு பகுதிகளில் வாக்கு சேகரிக்க சென்றார். அவருடன் முன்னாள் அமைச்சரும், அதிமுக தெற்கு மாவட்ட செயலாளருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் சென்றார். புதூர்செக்கடி, ஆத்திப்பாடி, மோத்தக்கல், மேல்பாச்சார் ஆகிய மலை கிராமங்களில் வாக்கு சேகரிக்க சென்றபோது அங்கு அதிமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சிக்காரங்க ஒரு சிலர் மட்டும் இருந்திருக்காங்க.

ஆனால் பொதுமக்கள் கூட்டம் இல்லையாம். இதனால் ஆத்திரமடைந்த மாஜி அமைச்சர், உள்ளூர் இலைக்கட்சி பிரதிநிதிகளை அழைத்து, ஒவ்வொரு ஊராட்சிக்கும் ரூ.10 ஆயிரம் கொடுத்தேன். அதுல என்ன செலவு செஞ்சீங்க, ஒரு ஆளுக்கு எவ்வளவு கொடுத்தீங்க, எத்தனை பேர் வந்திருக்காங்க, ஆரத்தி எடுக்க எத்தனை தட்டு வாங்கினீங்க, வெற்றிலை பாக்கு, பூவுக்கு எவ்வளவு செலவு செஞ்சீங்க, அதுக்கு கணக்கு சொல்லு, வாக்கு கேட்க கூட்டமே வராம இருக்குது. ஒழிச்சிடுவேன் உங்களை எல்லாம். ஜாக்கிரதையா நடந்துக்கோங்க, இன்னும் 2 நாள்ல திரும்பவும் நான் இங்க ஓட்டு கேட்க வருவேன். அப்போ, பிரசாரத்துக்கு கூட்டம் வரணும்னு எச்சரித்துட்டு போயிருக்குறாரு.