Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அமைச்சர் சேகர்பாபு தலைமையில் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்:

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில், கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இன்று (01.08.2024) இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் தலைமையில், கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ரிப்பன் கட்டட அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி, நீர்வளத்துறை, பொதுப்பணித்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைகள், மழைநீர் வடிகால்கள், பள்ளிக் கட்டடங்கள், பேருந்து நிலையம், மருத்துவமனை, குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டமைப்புகள், வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்புகள், மின் கட்டமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்திடவும், வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தொடர்புடைய அலுவலர்கள் மேற்கொள்ளுமாறும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.