Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர்: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை தீவிரமடைந்து உள்ளதால், கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததால் உபரிநீர் திறப்பு அதிகரித்து உள்ளது. இதனால் ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் 5,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 22 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 5,349 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 6,396 கனஅடியாக அதிகரித்தது.

டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி திறக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று காலை முதல் 13,500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு- மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 700 கனஅடி திறக்கப்படுகிறது. நீர்திறப்பு அதிகமாக இருப்பதால், நேற்று முன்தினம் 116.02 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 115.56 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 86.56 டிஎம்சியாக உள்ளது.