மேலூர்: மதுரை மாவட்டம், மேலூர் அருகே கீழவளவு பகுதியைச் சேர்ந்தவர் நவீன்குமார் (32). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வெள்ளையத்தேவன், மைக்கேல், அசோக், கார்த்தி உள்ளிட்டோருக்கும், அப்பகுதியில் நடந்த வீரகாளியம்மன் கோயில் திருவிழாவின் போது முன்விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில், நவீன்குமார் தனது காரில், கீழவளவு பஸ் ஸ்டாப் அருகே நேற்றுமுன்தினம் இரவு நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த வெள்ளையத்தேவன், அசோக், கார்த்தி உள்ளிட்ட சிலர் டிபன்பாக்ஸ் வெடிகுண்டை நவீன்குமாரின் காரின் முன்பக்க கண்ணாடி மீது வீசி உள்ளனர்.

கீழவளவு போலீசார் வெள்ளையத்தேவன், மைக்கேல் என்ற மகாலிங்கம், அசோக், அஜய், கார்த்தி, வசந்த், கண்ணன் மற்றும் பாலு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் வெள்ளையத்தேவன், அசோக் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து வாள், டிபன்பாக்ஸ் குண்டு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். போலீஸ் விசாரணையில், வெட்டப்பட்ட நவீன்குமார் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து வந்ததும், வெள்ளையத்தேவன் தரப்பினரும் இதே தடை செய்யப்ப்பட்ட பொருட்களை விற்று வந்ததில் இருதரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டு, கோயில் திருவிழாவில் இந்த மோதல் தீவிரமாகி கொலை முயற்சிகள் நடந்திருப்பதும் தெரிந்தது.
போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பியோடிய 6 பேரையும் பிடிக்க எஸ்பி உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து, தீவிரமாக தேடி வருகின்றனர். டிபன் பாக்சில் வெடிமருந்து நிரப்பி, வெடிக்கச் செய்திருப்பதால் கியூ பிரிவு போலீசாரும் தனி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


