Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கக்கூடாது: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: நெல்லை மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று ஐகோர்ட் கிளை உத்தரவு அளித்துள்ளது. தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு வசதிகளை செய்து தரும்வரை யாரையும் வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. நெல்லை மாஞ்சோலையைச் சேர்ந்த அமுதா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசு தரப்பில் நாளை மறுநாள் உரிய விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது. வழக்கை ஜூன் 21-க்கு ஒத்திவைத்து பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு உத்தரவு அளித்துள்ளனர்.