Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

5ம் வகுப்பு வரை இந்தியை கட்டாய பாடமாக்கி மராட்டிய அரசு புதிய அரசாணை வெளியிட்டதால் சர்ச்சை

மும்பை: 5ம் வகுப்பு வரை இந்தியை கட்டாய பாடமாக்கி மீண்டும் புதிய அரசாணையை மராட்டிய அரசு வெளியிட்டுள்ளது. ஆங்கிலம் மற்றும் மராட்டிய மொழிகளில் கல்வி கற்பிக்கும் பள்ளிகளில் இந்தி 3-வது மொழி என மராட்டிய அரசு ஆணையிட்டது. 3ம் மொழியாக எந்த மொழியும் கற்கலாம் என கூறி வந்த மராட்டிய அரசு இந்தியை கட்டாயமாக்கியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. வகுப்பு ஒன்றுக்கு 20 மாணவர்களுக்கு மேல் வேறு மொழியை கற்க விரும்பினால் மட்டுமே இந்தியை தவிர்க்க முடியும்.

3ம் மொழியாக இந்தி படிக்க வேண்டும் என மராட்டிய அரசு புதிய அரசாணை வெளியிட்டதால் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. கடந்த ஏப்ரலில் இந்தி கட்டாயம் என வெளியிட்ட அரசாணையை பெரும் எதிர்ப்பால் திரும்ப பெற்றது மராட்டியம். இந்தி பேசாத மாணவர்கள் மீது மராட்டிய அரசு இந்தியை திணிக்க முயல்வதாக எதிர்ப்பு எழுந்தது. எதிர்ப்பு எழுந்ததை அடுத்து கடந்த ஏப்ரலில் வெளியான அரசாணை திரும்பப் பெறப்பட்டது. ஒரு மாத இடைவெளிக்கு பின் இந்தி கட்டாயம் என அரசாணை வெளியிட்டுள்ளதால் பல தரப்பிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

பள்ளிகளில் பின்வாசல் வழியாக இந்தியை திணிக்க முயற்சி என மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கண்டனம் தெரிவித்துள்ளார். கட்டாய பாடமாக இந்தி கற்பிக்கும் பள்ளிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார்.