Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

எல்ஐசி, விமானநிலையம்... செல்லப்பிள்ளையான அதானி எதுகேட்டாலும் மோடி கொடுப்பார்: சபாநாயகர் கிண்டல்

நெல்லை: அதானி, மோடியின் செல்லப்பிள்ளை. அதனால் அவர் எதைக் கேட்டாலும் மோடி கொடுத்துவிடுவார் என்று சபாநாயகர் அப்பாவு கிண்டலாகக் கூறினார். நெல்லையில் சபாநாயகர் அப்பாவு நேற்று அளித்த பேட்டி: ஒன்றிய அரசு தமிழகத்திற்கு உரிய திட்ட நிதிகளை ஒதுக்கீடு செய்வதில் தொடர்ந்து பாரபட்சம் காட்டுகிறது. அதானி மோடியின் செல்லப்பிள்ளையாக இருக்கிறார். அவர் விமான நிலையம் உள்ளிட்ட எதை கேட்டாலும் மோடி கொடுத்து விடுவார். எல்ஐசியில் கூடுதல் பங்கு கேட்டால் கொடுத்து விடுவார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பழக்கம் உள்ளது. முதல்வருக்கு உள்ள பழக்கம் மக்களுக்கு எந்த இரவாக இருந்தாலும் நேரில் சென்று உதவுவார். அதுபோல் விஜய்க்கு ஒரு பழக்கம் இருக்கிறது. எப்போது தூங்கணும், எப்போது எழ வேண்டும். எப்போது சாப்பிடலாம் என ஷெடியூல் இருக்கிறது. எவ்வளவு நேரம் பயணிக்கனும் என அவர் ஷெடியூல் வைத்து செயல்படுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

* ‘ஓபிஎஸ் எங்கள் பக்கம்’

‘மக்களுக்கு அதிக சேவை செய்த திமுக கூட்டணி வரும் தேர்தலில் வெற்றி பெறும். நேற்று கூட ஓபிஎஸ் இந்த தேர்தலில் திமுக தான் வெற்றி பெறும் என கூறி இருக்கிறார். சட்டமன்றத்தில் அவர் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்’ என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.