Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கோத்தகிரி நூலகத்தில் கோடை கால பயிற்சி முகாம் நிறைவு

ஊட்டி : கோத்தகிரி நூலகத்தின் சார்பில் நடைபெற்று வந்த கோடை கால பயிற்சி முகாம் நிறைவு பெற்றது.தமிழக அரசு நூலகத்துறை மற்றும் கோத்தகிரி நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறை வகுப்புகள் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்றது.

அதன் நிறைவு விழா கோத்தகிரி நூலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வாசகர் வட்டத்தின் துணைத் தலைவர் மகாலட்சுமி தலைமை தாங்கினார். நீலகிரி மாவட்ட நூலக அலுவலர் வசந்த மல்லிகா சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டார்.

கோத்தகிரி நகர பஞ்சாயத்து தலைவர் ஜெயக்குமாரி, தொழிலதிபர் அரிமா சரவணன், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் கே.ஜே.ராஜு, சென்னை கிருத்துவக் கல்லூரியின் கோத்தகிரி கிளை சமுதாயக்கல்லூரி முதல்வர் லெனின், தமிழக அரசு நல்லாசிரியர் விருது பெற்ற முனைவர் லிங்கன், வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் ராஜ்குமார், கி ஸ்டோன் அமைப்பின் கள அலுவலர் மாணிக்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக வாசகர் வட்ட உறுப்பினர் அனுசியா வரவேற்றார். நூலகர் சித்ரா முகாம் குறித்து அறிக்கை வழங்கினார்.

கடந்த ஒரு மாத காலமாக கோடை விடுமுறையில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் முகாமில் பங்கேற்றனர். அவர்களுக்கு கணிதம், நுண்ணறிவு, வாசிப்பு, சிறப்பு கணினி வகுப்புகள் சுற்றுச்சூழல் ஆகிய துறைகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

மாணவர்கள் அனைவரும் நூலகத்தில் உறுப்பினராக சேர்க்கப்பட்டனர். மாணவர்களுக்கு பல்வேறு வகையான போட்டிகள் நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இறுதியாக நெடுகுளா நூலகர் ரமேஷ் நன்றி கூறினார்.