Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

காங்கயம் அருகே பரிதாபம் மரத்தில் கார் மோதி தம்பதி, மகள் பலி

காங்கயம்: மரத்தில் கார் மோதி தாய், தந்தை, மகள் பரிதாபமாக இறந்தனர். மற்றொரு மகள் படுகாயத்துடன் சிகிச்சை பெறுகிறார். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு பகுதியை சேர்ந்தவர் ராஜா (46). கேபிள் ஆபரேட்டர். இவரது மனைவி ஜானகி (40) இவர் ஈரோடு மாவட்டம், அரச்சலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்பந்த செவிலியராக பணிபுரிந்து வந்தார். இவர்களது 2 மகள்கள் ஹேமி மித்ரா (15), மெளனா ஷெரின் (11). நவரசம் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10 மற்றும் 5ம் வகுப்பு படித்தனர். இவர்கள் மருத்துவமனை குடியிருப்பில் வசித்து வந்தனர்.

கடந்த 10 நாட்களுக்கு முன் கேரளாவில் உறவினர் இல்ல விஷேசத்திற்கு சென்ற இவர்கள், நேற்று அதிகாலை 3 மணிக்கு கேரளாவில் இருந்து காரில் அரச்சலூர் திரும்பினர். காங்கயம் அருகே நத்தக்காடையூர் பகுதியில் சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த கார், புளியமரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே காரை ஓட்டி வந்த ராஜா, மனைவி ஜானகி, மூத்த மகள் ஹேமி ஹித்ரா ஆகிய 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த மெளனா ஷெரின் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து காங்கயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.