Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் டெபாசிட் : பராமரிப்பு செலவுக்காக மாதம் ரூ.5,000 : முதல்வர் அறிவிப்பு!!

சென்னை : விஷச் சாராய விவகாரம் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானங்கள் மீதான விவாதத்துக்கு பதில் அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்,"கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் வழக்கில் தொடர்புடைய நபர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யப்படுவர். கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு அறிவித்த ரூ.10 லட்சம் உடனடியாக வழங்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களுடைய குழந்தைகளின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும். பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் வங்கியில் டெபாசிட் செய்யப்படும்.பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடையும் வரை பராமரிப்பு செலவுக்காக மாதம் ரூ.5,000 வழங்கப்படும்,"இவ்வாறு கூறினார்.