Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

நீதிபதி குறித்து அவதூறு கருத்து பதிவிட்டவர் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டவர் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூர் தவெக கூட்டத்தில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பான வழக்கில் உத்தரவிட்ட உயர் நீதிமன்ற நீதிபதி குறித்து சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் கிஷோர் கே.சாமி, கடந்த அக்டோபர் மாதம் தனது எக்ஸ் தளத்தில், ‘யார் யாருக்கு தலைமைத்துவ பண்பு இருக்கிறது என்பதை ஆராய்வது நீதிமன்றத்தின் வேலை கிடையாது.

சட்டம் மீறப்பட்டிருந்தால் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கலாம். மற்ற கருத்துக்கள் அவசியமற்றது’ என்று பதிவிட்டிருந்தார். இதையடுத்து, நீதிபதியை விமர்சனம் செய்ததாக ஆலந்தூரை சேர்ந்த இளமாறன் என்பவர் சென்னை சைபர் கிரைம் போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கிஷோர் கே.சாமி மீது பின்என்எஸ் சட்ட பிரிவுகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்ட பிரிவின்கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி கிஷோர் கே.சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு வழக்கறிஞர் சந்தோஷ் ஆஜராகி, வழக்கை ரத்து செய்ய கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.