Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

21ம் தேதி ‘இந்தியா’ கூட்டணி பேரணி; மோடியின் வாக்குறுதிகள் பொய்யும், வஞ்சகமும் நிறைந்தது: ஜார்கண்ட் முதல்வர் காட்டம்

பெர்மோ: பிரதமர் மோடியின் வாக்குறுதிகள் பொய்யும், வஞ்சகமும் நிறைந்தது என்று ஜார்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன் தெரிவித்தார். ஜார்கண்ட் மாநிலம் பெர்மோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநில முதல்வர் சம்பாய் சோரன் பேசுகையில், ‘ஜார்கண்டில் வசிக்கும் ஒவ்வொரு பழங்குடியினருக்கும் பிரதமர் மோடியும், பாஜகவும் அளித்த வாக்குறுதிகள் தெரியும். பொய், வஞ்சகம், துரோகம் ஆகியவற்றைத் தவிர வேறு எதையும் அவர்கள் (பாஜக) மக்களுக்கு வாக்குறுதிகளாக வழங்கவில்லை. ஜார்கண்டில் வீடற்ற பலருக்கு, ஒன்றிய அரசின் திட்டத்தின் கீழ் வீடுகள் மறுக்கப்பட்டுள்ளன. ஹேமந்த் சோரனின் (தற்போது சிறையில் உள்ளார்) தலைமையிலான எங்களது ஆட்சியில், அபுவா அவாஸ் திட்டத்தின் மூலம் வீடற்றவர்களுக்கு வீடுகட்டி கொடுத்துள்ளோம்.

கடந்த 2014 முதல் 2019 வரையிலான பாஜக தலைமையிலான இரட்டை இன்ஜின் ஆட்சி காலத்தில், 5,000க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் மூடப்பட்டன. பழங்குடியின மாணவர்களின் அடிப்படைக் கல்வியை பாஜக அரசு பறித்தது’ என்றார். இதற்கிடையில், ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன், ராஞ்சியில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் காண்டே இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டது. வரும் 21ம் தேதி ராஞ்சியில் நடைபெறும் கட்சிப் பேரணியை அவர் வழிநடத்த உள்ளதாகவும், ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் அந்த பேரணியில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.