Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இங்கிலாந்தை வீழ்த்தி டி20 தொடரை வென்றது இந்தியா பெண்கள் அணி: 20 ஆண்டுக்கு பின் சாதனை

மான்செஸ்டர்: இங்கிலாந்து-இந்தியா பெண்கள் அணிகளுக்கு இடையிலான 4வது டி20 மான்செஸ்டர் நகரில் நடந்தது. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து வீராங்கனைகள், இந்திய பந்து வீச்சை சமாளித்து ரன் குவிக்க தடுமாறினர். எனினும் 20 ஓவர் வரை ஆடிய இங்கிலாந்து 7 விக்கெட் இழப்புக்கு 126 ரன் எடுத்தது. அணியில் அதிகபட்சமாக சோபியா 22, கேப்டன் டம்மி 20ரன் எடுத்தனர். இந்திய வீராங்கனைகளில் ஸ்ரீசரணி, ராதா யாதவ் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். அதனையடுத்து 127 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கடன் இந்தியா விளையாடியது. சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தாலும் ஸ்கோரும் வேகமாக உயர்ந்த வந்தது. மந்தானா 32, ஷபாலி 31, கேப்டன் ஹர்மன்பிரீத் 25ரன் எடுத்தனர். இடையில் அமன்ஜோத் மட்டும் 2 ரன்னில் ரன் அவுட்டானார்.

எனினும் 17வது ஓவரின் முடிவில் 4விக்கெட் இழப்புக்கு 127 ரன் எடுத்த இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. ஆட்ட நாயகியாக 4 ஒவர் வீசி 15ரன் மட்டும் தந்து 2விக்கெட்களை கைப்பற்றிய இந்தியாவின் ராதா யாதவ் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் இந்திய வீராங்னைகள் 3-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. கூடவே தொடரையும் கைப்பற்றி உள்ளது. இங்கிலாந்து - இந்தியா இடையே இத்துடன் 8 டி20 தொடர்கள் நடந்துள்ளன.

அவற்றில் 2006ம் ஆண்டு ஒரு ஆட்டம் கொண்ட முதல் தொடரில் இந்தியா வெற்றிப் பெற்றது. அதன் பிறகு கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரை வென்றுள்ளது. இடையில் நடந்த 6 தொடர்களையும் இங்கிலாந்து தொடர்ந்து கைப்பற்றியது. அதுமட்டுமல்ல இந்தியா வென்ற இந்த 2 தொடர்களும் இங்கிலாந்து மண்ணில் நடந்தவை. இந்த 2 அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 5வது டி20 ஆட்டம் நாளை பிர்மிங்காமில் நடைபெறும்.