Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

4000 பேர் பாதிப்பு கொரோனா பலி 37ஆக உயர்வு

புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4026 ஆக உயர்ந்தது. இதுவரை 37 பேர் பலியாகி விட்டனர். இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,000ஐத் தாண்டியுள்ளது. கேரளா மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ளது. தற்போது, ​​கேரளாவில் 1,446 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அடுத்ததாக மகாராஷ்டிராவில் 494, குஜராத்தில் 397, டெல்லியில் 393 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது நிலவரப்படி இந்தியாவில் 4,026 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 37 பேர் பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5 பேர் பலியாகி விட்டனர். கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் தலா ஒருவரும், மகாராஷ்டிராவில் 2 பேரும் பலியாகி உள்ளனர்.