Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சாலையை அகலப்படுத்த நெடுஞ்சாலை ஆணையத்துக்கு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் கடிதம்!!

சென்னை: மதுராந்தகம்-மேல்மருவத்தூர் இடையே பாலப் பணி நடக்கும் இடத்தில் சாலையை அகலப்படுத்தி தர வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் கடிதம் அனுப்பியுள்ளது. பால பணியால் பேருந்துகள் வர தாமதம் ஏற்படுவதே கிளாம்பாக்கத்தில் பயணிகள் கூட்டம் அதிகரிக்கக் காரணம். மதுராந்தகம் - மேல்மருவத்தூர் இடையே இரு இடங்களில் பாலப் பணிகள் நடைபெறுகின்றன. போக்குவரத்திற்கு அனுமதிக்கப்படும் இரு வழித்தடங்களையும் அகலப்படுத்தி தர வேண்டும் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.