Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கை விண்ணப்ப பதிவு கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பப் பதிவு கடந்த 7ம் தேதி தொடங்கி நேற்றுடன் (மே 27) முடிவடைவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. மாணவர்களின் நலன் கருதி வருகிற 30ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது : இதுவரை 2 லட்சத்து 25,705 விண்ணப்பங்கள் இணைய தளம் வாயிலாக பதிவு செய்யப்பட்டுள்ளன. 1,08,619 மாணவிகள், 76,065 மாணவர்கள் மற்றும் 78 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 1,84,762 மாணவர்கள் கட்டணம் செலுத்தி உள்ளனர். சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் நாளை கல்லூரிகளில் வெளியிடப்படும்.

பொதுப்பிரிவினருக்கான தரவரிசைப் பட்டியல் 30ம் தேதி கல்லூரிகளில் வெளியிடப்படும். கல்லூரி இணைய தளங்களிலும் வெளியிடப்படும். மேலும், 176 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவு மற்றும் பொது கலந்தாய்விற்கான தகவல்கள், குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக மாணவர்களுக்கு அந்தந்த கல்லூரிகளிலிருந்து தெரிவிக்கப்படும்.

27.05.2025-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்கள் மற்றும் துணைத்தேர்வு எழுதும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் மீண்டும் 30.05.2025 அன்று முதல் இணையதளம் வாயிலாக விண்ணப்பப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.