Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

வரும் காலங்களில் பால் கொள்முதலுக்கு கூடுதல் விலை: அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

மேட்டூர்: சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள புக்கம்பட்டியில் தேசிய பால்வள தினத்தை ஒட்டி, கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமை துவக்கி வைத்து பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களிடம் கூறியதாவது: தேசிய பால் வள தினத்தை ஒட்டி அனைத்து பால் உற்பத்தியாளர்களுக்கும் தமிழ்நாடு அரசு சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன். தமிழ்நாட்டில் 5,000 சிறு பண்ணைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. வேலை இல்லாத இளைஞர்கள், சுய தொழில் துவங்க விரும்பும் இளைஞர்கள், பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் தலா ரூ. 3 லட்சம் வீதம் 5000 பேருக்கு ரூ.150 கோடி உடனடி கடன் வழங்கப்பட உள்ளது.

மானியத்துடன் 4 சதவிகித வட்டி மட்டுமே கட்ட வேண்டும். இத்துடன் பல்வேறு துறைகள் சார்ந்த மானியத்தையும் இணைக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதிகமானோர் சிறு பண்ணை அமைக்க முன் வந்தால் அவர்களுக்கும் மானியக்கடன் வழங்க தமிழக அரசு தயாராக உள்ளது. பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு ரூ.3 ஊக்கத்தொகை அளித்தார் முதல்வர். பால்வளத்துறை சார்பில் தரமான பாலுக்கு ரூ.1 ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. எருமைகளை பாதுகாக்க 5 மாவட்டங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நல்ல வீரியமான நாட்டின மாடுகளை உருவாக்க மருத்துவர்கள் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.

நாட்டின மாடுகள் அதிகமான பால் தராது என்பது தவறான கருத்து. அதனை முறையாக கவனித்து மருத்துவர்களின் ஆலோசனை பெற்று பராமரித்தால் அதிகமான பால் பெற முடியும். நாட்டின மாடுகளை அழிவின் பிடியிலிருந்து காப்பாற்ற இளைஞர்களுக்கு பயிற்சி தரப்படுகிறது. தீவன உற்பத்தியை பெருக்க புதிய தொழில்நுட்பத்தை கடைபிடித்து வருகிறோம். வரும் கால கட்டங்களில் பால் கொள்முதலுக்கு அதிக விலை கொடுப்போம். இவ்வாறு கூறினார்.