Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சட்டநாதபுரத்தில் பாதுகாப்பும், சுகாதாரமில்லாமலும் இருக்கும் குடிநீர் தொட்டி

*மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சீர்காழி : சீர்காழி அருகே சட்டநாதபுரத்தில் சுகாதாரமற்ற நிலையில் இருக்கும் குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோ ரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரம் ஊராட்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் சுமார் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு, அந்த தொட்டியில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் பைப்லைன் அமைக்கப்பட்டு பைப் லைன் மூலம் தண்ணீர் கொண்டு வந்து தொட்டியில் சேமித்து, பின்பு பல்வேறு பகுதிகளுக்கு குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த தண்ணீர் தொட்டி அமைந்துள்ள பகுதியில் சுற்றுச்சுவர் அமைக்கப்படாததால் பாதுகாப்பற்ற நிலையில் தண்ணீர் தொட்டி இருந்து வருகிறது. மேலும், இந்த குடிநீர் தொட்டி கடந்த சில மாதங்களாக சுத்தம் செய்யப்படாததால் தண்ணீர் தொட்டியில் கழிவுகள் தேங்கி காணப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பொதுமக்களுக்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் சரிவர தண்ணீர் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டும் பொதுமக்கள் எழுப்பி வருகின்றனர்.

எனவே, பொதுமக்கள் நலன் கருதி குடிநீர் தொட்டியை பாதுகாக்கும் வகையில் சுற்று சுவர் அமைக்க வேண்டும் என்றும், குடிநீர் தொட்டியை சுத்தம் செய்து பொதுமக்களுக்கு சுகாதாரமான தண்ணீர் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.