Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திண்டுக்கல் மாநகராட்சியில் வரி வசூல் தொகையில் ரூ.4.69 கோடி முறைகேடு: பெண் அதிகாரி உள்பட 2 பேர் சஸ்பெண்ட்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில், வரிவசூல் செய்த பணத்தை வங்கியில் செலுத்தாமல் கையாடல் செய்ததாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இதுதொடர்பாக இளநிலை உதவியாளர் சரவணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனை கண்காணிக்க தவறிய கண்காணிப்பாளர் சாந்திக்கு கடந்த 5ம் தேதி விளக்கம் கேட்டு மெமோ கொடுக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து கணக்குகளை தணிக்கை செய்தபோது, சுமார் 4 கோடியே 69 லட்சம் ரூபாய் வரை முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக திண்டுக்கல் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக கண்காணிப்பாளர் சாந்தி மற்றும் இளநிலை உதவியாளர் சதீஷ் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து, ஆணையர் ரவிச்சந்திரன் நேற்று உத்தரவிட்டார்.