திருவள்ளூர் அருகே டீசல் டேங்கர் ரயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட நிலையில் மீண்டும் ஒரு டேங்கரில் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரயிலில் இருந்த டேங்கரை தள்ளியபோது டீசல் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்து வருகிறது. 18 டீசல் டேங்கர்கள் முழுமையாக எரிந்த நிலையில் மேலும் ஒரு டேங்கரில் தீப்பிடித்தது. டீசல் டேங்கரில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Advertisement