Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மருமகளை கொன்று மூட்டை கட்டி கால்வாயில் வீசிய மாமியார், காதலன்: பரபரப்பு வாக்குமூலம்

மன்னார்குடி: மன்னார்குடி அருகே உள்ள எடமேலையூர் வடக்கு அம்பலக்கார தெருவை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி இளஞ்சியம் (45). இவருக்கும், அதே ஊரை சேர்ந்த தங்க பாண்டியன் (41) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலானது. இதையடுத்து கணவரை பிரிந்து தனது 3 மகன்களை அழைத்து கொண்டு, கள்ளக்காதலன் தங்கப்பாண்டியனுடன் கடந்த 10 வருடங்களுக்கு முன் திருப்பூர் சென்ற இளஞ்சியம் அங்கு வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

இளஞ்சியத்தின் மூத்த மகன் அரவிந்தராஜ் (25) அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்த நிலையில், அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நாகப்பட்டினம் மாவட்டம் கூரத்தாங்குடி கிராமத்தை சேர்ந்த சினேகா (23) என்பவரை காதலித்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு குடும்பத்தகராறு காரணமாக அரவிந்தராஜ் தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து, அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம் கடந்த 13ம்தேதி முடிந்த நிலையில் இளஞ்சியம், அவரது கள்ளக்காதலன் தங்கபாண்டியன் மற்றும் மருமகள் சினேகா, அவரது குழந்தை ஆகிய 4 பேரும் கடந்த 18ம் தேதி எடமேலையூருக்கு வந்துள்ளனர். கடந்த 20ம்தேதி இரவு திருப்பூர் செல்ல வேண்டும் என சினேகா கூறியதால், அவரை அனுப்பி வைப்பதற்காக மன்னார்குடி பேருந்து நிலையத்திற்கு தங்கபாண்டியன் பைக்கில் அழைத்து சென்றுள்ளார். 21ம்தேதி சினேகாவிற்கு, அவரது தாய் தமிழ்ச்செல்வி செல்போனில் பலமுறை தொடர்பு கொண்டும் அவர் எடுக்கவில்லை. இதுதொடர்பாக தமிழ்ச்செல்வி கடந்த 21ம்தேதி மன்னார்குடி டவுன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

சந்தேகத்தின் பேரில் தங்கபாண்டியனிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், திருப்பூரில் கணவர் இறந்த பின் சினேகாவின் நடத்தையில் சந்தேகம் இருந்து வந்தது. அவரும் தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என கூறி வந்தார். இதனால் மன்னார்குடியில் வைத்து சினேகாவை தீர்த்து கட்டுவதற்கு முடிவு செய்து கோயிலுக்கு செல்வது போல் எடமேலையூர் அழைத்து வந்து அங்கு இளஞ்சியத்துடன் சேர்ந்து தங்கபாண்டியன், சினேகாவை அடித்து கொன்று அவரது உடலை சாக்கு மூட்டையில் கட்டி சோனாப்பேட்டை வாய்க்காலில் வீசி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் சினேகாவில் உடலை மீட்டு, இளஞ்சியம் மற்றும் தங்கபாண்டியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.