Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

குறைதீர் முகாமில் பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார் கமிஷனர் அருண்

சென்னை: சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் முகாமில் பொதுமக்களிடம் நேரடியாக போலீஸ் கமிஷனர் அருண் புகார் மனுக்கள் பெற்றார். வேப்பேரியில் உள்ள சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை தினசரி பொதுமக்கள் குறை தீர்வு முகாம் நடந்து வருகிறது. இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது புகார்களை மனுக்களாக அளித்து வருகின்றனர். பொதுமக்கள் அளிக்கும் புகார்களின் தன்மைக்கு ஏற்றபடி பிரித்து சம்பந்தப்பட்ட பிரிவுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதேநேரம் வாரத்தின் புதன்கிழமை மட்டும் போலீஸ் கமிஷனர் அருண் பொதுமக்களிடம் நேரடியாக புகார்கள் பெற்று நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன்படி காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடந்த பொதுமக்கள் குறை தீர் முகாமில், போலீஸ் கமிஷனர் அருண் கலந்துகொண்டு முதியவர்கள் உள்பட 35 பேரிடம் நேரடியாக புகார் மனுக்கள் பெற்றார். பிறகு மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். நிகழ்ச்சியில் தலைமையிட கூடுதல் கமிஷனர் கபில்குமார் சரட்கர் உடனிருந்தார்.