Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

உயிரி மருத்துவ கழிவுகளை கொட்டுவோருக்கு விசாரணையின்றி சிறை தண்டனை: சட்டசபையில் மசோதா தாக்கல்

சென்னை: தமிழக சட்டமன்றத்தில் இன்று அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்த சட்ட மசோதாவில் கூறியிருப்பதாவது: உயிரி மருத்துவக் கழிவுகளை முறையற்று குவிப்பது பொது சுகாதாரத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் கடும் அபாயத்தை ஏற்படுத்தக் கூடியதாக அமைந்துள்ளது. அண்டை மாநிலங்களில் இருந்து நமது மாநிலத்தில் உயிரி மருத்துவக் கழிவுகள் கொட்டுவது தொடர்பாக அடிக்கடி புகார்கள் பெறப்படுகின்றன.

கள்ளச்சாராயக்காரர்கள், கணினி வெளிச் சட்ட குற்றவாளிகள், மருந்து சரக்கு குற்றவாளிகள், வனக்குற்றவாளிகள், மணல் கடத்தல் குற்றவாளிகள், பாலியல் குற்றவாளிகள் ஆகியோருக்கு மட்டுமே தடுப்புக்காவல் அளிக்கப்பட்ட நிலையில் தற்போது உயிரி மருத்துவக் கழிவுகளை கொட்டுவோருக்கும் தடுப்புக் காவல் விதிக்கப்படும்.இந்த சட்டமுன்வடிவின் படி இனி தமிழகத்தில் உயிரி மருத்துவக் கழிவுகளை முறையற்று குவித்தாலோ, அண்டை மாநிலங்களிலிருந்து வந்து தமிழகத்தில் மருத்துவக் கழிவுகளை கொட்டினாலோ உயிரி மருத்துவக் கழிவு மேலாண்மை விதிகளை மீறியதாக கருதி தடுப்புக் காவலில் வைக்கப்படுவார்கள்.