Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

படர்தாமரை உடலுக்கு நாசம்; ஆகாயத்தாமரை குளத்திற்கு நாசம்; பாஜ தாமரை தேசத்திற்கு நாசம்: பங்கம் செய்த கருணாஸ்

விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம்தாகூருக்கு ஆதரவாக, சிவகாசி அருகே திருத்தங்கல்லில் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நடிகர் கருணாஸ் பிரசாரம் செய்து பேசியதாவது:

பொய் சொல்வது என்பதையே பிரதான ஆயுதமாக கொண்டுள்ளது பாஜ. பல்வேறு குற்ற பின்னணிகளில் உள்ளவர்களை பாஜ கட்சியில் சேர்க்கின்றனர். இதுதான் மக்களுக்கான கட்சியா? நம்மை ஜாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் மோடி வகையறாக்கள் பிரிக்கின்றனர். சாமிக்காக அரசியல் நடத்துவது பாஜ. பூமிக்காக அரசியல் நடத்தி வருபவர் முதல்வர் ஸ்டாலின். சசிகலாவுக்கு துரோகம் செய்தவர்கள்தான் எடப்பாடி பழனிசாமி, தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ்சும். முக்குலத்தோரின் முதல் எதிரி பாஜதான். பாஜவுக்கு யாரும் ஒற்றுமையுடன் இருக்கக் கூடாது.

இந்த மண்ணுக்கு துரோகம் செய்பவர்கள், தமிழகத்தை அழிக்க நினைப்பவர்கள் சர்வ நாசம் ஆகிடுவார்கள். படர்தாமரை உடலுக்கு நாசம், ஆகாயத்தாமரை குளத்திற்கு நாசம், பாஜ தாமரை தேசத்திற்கு நாசம். நமக்கு நாமே பாதுகாக்க வேண்டிய தேர்தல் தான் இது. தமிழகத்தின் சமூக நீதியை பாதுகாக்க, இந்திய ஜனநாயகத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.