Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஆசிய கோப்பை தொடரில் இருந்து இந்தியா விலக முடிவெடுத்துள்ளதாக வெளியான தகவலுக்கு பிசிசிஐ மறுப்பு

மும்பை; ஆசிய கோப்பை தொடரில் இருந்து இந்தியா விலக முடிவெடுத்துள்ளதாக வெளியான தகவலுக்கு பிசிசிஐ மறுப்பு தெரிவித்துள்ளது. "எதிர்வரும் ஆசிய கோப்பை தொடர் குறித்து எந்த பேச்சுவார்த்தையோ, முடிவையோ இதுவரை பிசிசிஐ செய்யவில்லை. ஐபிஎல் மற்றும் இங்கிலாந்து தொடர்கள் மீதுதான் தற்போது எங்களது முழு கவனம் உள்ளது" என பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா தெரிவித்துள்ளார்.

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகள் பங்கேற்கும் ஆசிய தொடர் ஒருநாள் மற்றும் டி20 வடிவங்களில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. ஆடவர் ஆசிய கோப்பை தொடர் இந்தியாவிலும், மகளிர் ஆசிய கோப்பை தொடர் இலங்கையிலும் நடத்த திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் பகல்ஹாம் தாக்குதல் காரணமாக இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக இரு நாட்டு அணிகளும் இனி நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதையடுத்து ஆசிய கோப்பை தொடரை புறக்கணிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகி வந்தது.

இந்நிலையில் வெளியான தகவல்கள் குறித்து பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா தெரிவித்துள்ளதாவது; ஆசிய கோப்பை மற்றும் மகளிர் ஆசிய கோப்பை என 2 தொடர்களிலும் இந்திய அணி பங்கேற்காது என பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாவது எங்கள் கவனத்திற்கு வந்தது.

இந்த செய்திகளில் உண்மை இல்லை. இதுகுறித்து பிசிசிஐ எந்த ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை. தற்போது எங்கள் முழு கவனமும் ஐபிஎல் மீதும் அடுத்து வரும் இங்கிலாந்து தொடர் மீதும் உள்ளது" என தெரிவித்துள்ளார்.