Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆந்திராவில் இருந்து கடத்தி வந்த 100 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது

சென்னை: ஆந்திராவிலிருந்து திருவள்ளூர் மாவட்டம் வழியாக கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் கடத்தி வரப்படுவதாக மாவட்ட எஸ்பி சீனிவாச பெருமாளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனையடுத்து எஸ்.பி உத்தரவின் பேரில் திருவள்ளூர் மாவட்டம் புல்லரம்பாக்கம் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சரக்கு லாரி ஒன்று திருவள்ளூர் நோக்கி வந்து கொண்டிருந்து. அதனை மடக்கி போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

அதில் 3 பைகளில் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து வந்த அந்த வாகனத்தில் 100 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இந்த சரக்கு வாகனம் திருவள்ளூர், சென்னை வழியாக தூத்துக்குடிக்குச் செல்லவிருந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட சுகுமார் மற்றும் கலைச்செல்வன் ஆகிய இருவரையும் கைது செய்து கலால் டிஎஸ்பி அனுமந்தன் விசாரணை நடத்தி வருகிறார்.