Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆந்திராவில் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு நடந்த சேவல் சண்டை: வேடிக்கை பார்த்த சேவலுக்கு ரூ.1.25 கோடி பரிசு!

அமராவதி: ஆந்திராவில் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு சேவல் சண்டை நடைபெற்றது. இந்த போட்டியில் ஒரு சேவல் களத்தில் நகராமல் நின்ற இடத்திலேயே இருந்து ரூ.1.25 கோடி பரிசு தொகையை வென்றுள்ளது. ஆந்திராவில் உள்ள சில பகுதிகளில் நேற்று சேவல் சண்டை நடந்த நிலையில் கிட்டத்தட்ட 2000 கோடி ரூபாய்க்கு சூதாட்டம் நடந்ததாகவும் இதில் வேடிக்கை பார்த்த சேவல் ஒன்று ரூ.1.25 கோடி பரிசு பெற்றதாகவும் வெளி வந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திராவில் உள்ள கிருஷ்ணா மற்றும் என்டிஆர் மாவட்டங்களில் பல கிராமங்களில் சேவல் சண்டை நடைபெறுகிறது. இந்நிலையில் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் 5 சேவல்கள் ஒரே வளையத்திற்குள் சண்டை போட களம் இறக்கப்பட்ட நிலையில் இதில் நான்கு சேவல்கள் தங்களுக்குள் சண்டை போட்டு ஒரு கட்டத்தில் மயக்கம் ஆகிவிட்டன. ஆனால் இந்த நான்கு சேவல்களையும் கண்டு கொள்ளாமல், கடைசி வரை களத்தில் நின்ற வேடிக்கை பார்த்த சேவல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த சேவலின் உரிமையாளருக்கு ரூ.1.25 கோடி பரிசாக அளிக்கப்பட்டது. இந்த தகவல் அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.