Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மீண்டும் கூட்டத்தை புறக்கணித்த அன்புமணி கட்சி என்றால் கோஷ்டிகள் இருக்கும்: ராமதாஸ் பரபரப்பு பேச்சு

திண்டிவனம்: கட்சி என்றால் கொஞ்சம் கோஷ்டிகள் இருக்கத்தான் செய்யும் என்று ராமதாஸ் கூறினார்.

பாமகவில் தந்தை ராமதாஸ், மகன் அன்புமணி இடையே மோதல் போக்கு தொடர்கிறது. பாமகவின் பல்வேறு பிரிவு நிர்வாகிகள் கூட்டத்தை தைலாபுரம் தோட்டத்தில் நடத்தி முடித்துள்ள ராமதாஸ், கட்சியின் சமூக முன்னேற்ற சங்க கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி இந்த கூட்டம் ராமதாஸ் தலைமையில் திண்டிவனத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தையும் செயல் தலைவர் அன்புமணி புறக்கணித்துவிட்டார். கூட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது: பாமகவுக்கு முன்னோடியாக சமூக முன்னேற்ற சங்கம் உள்ளது. பாட்டாளி மக்கள் கல்வியில் வளர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. கட்சி என்றால் கொஞ்சம் கோஷ்டிகள் இருக்க தான் செய்யும். இது அனைத்து கட்சிக்கும் சொல்கிறேன். சங்கம் என்றால் சங்கமிப்பது. சமுதாயத்துக்கு பிரச்னை என்றால் சண்டை, அடி இல்லாமல் உதவ வேண்டும்.

சக்தி மிக்க பெண்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும். இந்த அமைப்பு மூலம் அரசு ஊழியர்களை கிராமங்கள்தோறும் உருவாக்க வேண்டும். சமூக முன்னேற்ற சங்கத்துக்கு மாதம் மாதம் 500 ரூபாய் அளிக்க வேண்டும். சமூக முன்னேற்ற சங்கத்தில் உள்ளவர்கள் கிராமங்களில் கஞ்சா இல்லை, மதுவை ஒழித்துவிட்டோம் என மார்தட்டி சொல்ல வேண்டும். அதுபோன்று ஊருக்குள் வெளியே தங்கள் கிராமத்தில் யாருக்கும் கஞ்சா, மதுப்பழக்கம் இல்லை என்று பேனர்கள் வைக்க வேண்டும். தேர்தல் என்றால் பணம், பொதுமக்கள், நேரம் என்று மூன்றும் இல்லாமல், கட்சியும் இல்லை, தேர்தலும் இல்லை. யார் மனமும் நோகாமல் சமூக வலைதளத்தில் பதிவிட வேண்டும். சமூகம் வளர்ச்சிக்காக அது இருக்க வேண்டும். பாமக எந்த சமுதாயத்துக்கும் எதிரானது அல்ல. எல்லோரையும் அரவணைத்து செயல்பட வேண்டும். பாமக துணை தலைவர்கள் ஒருவர் கூட வன்னியர் இல்லை.

இவ்வாறு அவர் பேசினார்.