Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அன்புமணியுடன் எந்த முரண்பாடும் இல்லை : பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி

சென்னை: அன்புமணியுடன் எந்த முரண்பாடும் இல்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி அளித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையில் மோதல் தொடர்ந்து வருகிறது. பாமக தலைவர் அன்புமணியை பதவி நீக்கம் செய்து, அவரை செயல் தலைவராக ராமதாஸ் நியமனம் செய்தார். அதுமட்டுமல்லாமல் அன்புமணி அவரின் தாயையே பாட்டிலை எடுத்து வீசி அடிக்க முயற்சித்தார் என்றும் ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார்.

இதன்பின் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையில் சமாதானம் மேற்கொள்ள நிர்வாகிகள் முயற்சித்து வந்தனர். இந்த நிலையில் ஆடிட்டர் குருமூர்த்தி பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்து 3 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து இன்று திடீரென ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் இருந்து சென்னை புறப்பட்டார்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து ராமதாஸ் பேசுகையில், தைலாபுரம் தோட்டத்தில் அன்புமணியை சந்தித்தபோது சமரசம் ஏற்பட்டதா என்ற கேள்விக்கு பதில் தெரிவித்துள்ளார். அதில், பல் மருத்துவரை சந்திக்க மட்டுமே சென்னை வந்துள்ளேன்; வேறு சந்திப்புக்கு திட்டமிடவில்லை. அன்புமணியை சந்திக்க திட்டம் எதுவும் இல்லை. அன்புமணியுடன் இணைந்து செயல்படுவீர்களா என்ற கேள்விக்கு நீங்கள் எதிர்பார்ப்பது நடக்கும் என பதில் தெரிவித்தார்.

பாஜக- பாமக கூட்டணி உறுதியாகுமா? - ராமதாஸ் பதில்

பாஜக பாமக கூட்டணி உறுதியாகுமா? என்ற கேள்விக்கு தனக்கு தெரியாது என மருத்துவர் ராமதாஸ் பதில் தெரிவித்தார்.

கூட்டணி உறுதியாகுமா? என நினைத்துக்கூட பார்க்கவில்லை

அமித்ஷா வருகையின்போது பாஜக -பாமக கூட்டணி உறுதியாகுமா என்பதை பற்றி நினைத்து பார்க்கவில்லை.

முகுந்தன் கட்சி பதவியை விரும்பவில்லை -ராமதாஸ்

தனது பேரன் முகுந்தன் கட்சி பொறுப்பை விட தொழில் செய்வதில் ஆர்வம் காட்டுவதாக ராமதாஸ் விளக்கம் அளித்தார்.