Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அமர்நாத் யாத்திரை 14000 பேர் பனிலிங்க தரிசனம்

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை வியாழனன்று முறைப்படி தொடங்கியது. இதனை தொடர்ந்து பக்தர்கள் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் மற்றும் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள பால்டால் ஆகிய வழக்கமான இரண்டு பாதைகளிலும் யாத்திரையை தொடங்கினார்கள்.

இதுவரை 14000 பேர் பனிலிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர். இந்நிலையில் 6411 பேர் அடங்கிய மூன்றாவது குழுவானது ஜம்முவில் உள்ள அடிவார முகாமில் இருந்து நேற்று அமர்நாத் யாத்திரைக்கு புறப்பட்டுச் சென்றது. இதில் 4,723 ஆண்கள், 1071 பெண்கள், 37 சிறுவர்கள் மற்றும் 580 சாதுக்கள் உள்ளிட்டோர் அடங்குவர்.