Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அமராவதி அணையிலிருந்து 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட உத்தரவு

சென்னை: திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையிலிருந்து, அமராவதி பிரதான கால்வாயின், புதிய பாசனப் பகுதிகளில் நிலையில் உள்ள பயிர்களை காப்பாற்றும் பொருட்டு நாளை முதல் ஜூலை 5ம் தேதி முடிய 15 நாட்களுக்கு, அமராவதி அணையின் பிரதானக் கால்வாய் மதகு வழியாக 440 கன அடி / வினாடி வீதம் 570.24 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால், திருப்பூர் மாவட்டத்திலுள்ள 25250 ஏக்கர் அமராவதி அணை புதிய பாசன நிலங்கள் பாசன வசதி பெறும்.