Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கூட்டணியில் கட்சிகளை சேர்க்க எடப்பாடிக்கே அதிகாரம்: அமித்ஷா வியூகத்துக்கு அதிமுக எதிர்ப்பு

சென்னை: வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக -பாஜக கூட்டணி சேர்ந்து போட்டியிட அதிமுக பொதுக்குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் தமிழ்நாட்டில் கூட்டணிக்கு அதிமுகவே தலைமை தாங்கும் என்று அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியே முதலமைச்சர் வேட்பாளர் என்று அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கூட்டணி, கட்சி ஒருங்கிணைப்பு குறித்து முடிவு எடுக்காமல் அதிமுக பொதுக்குழு முடிந்தது.

தேர்தலுக்கு முன் இன்று நடந்து முடிந்த அதிமுக பொதுக்குழுவில் கட்சியின் கூட்டணி வியூகம் குறித்து விவாதிக்கப்படவில்லை. பெரிதும் பரபரப்பாக பேசப்பட்ட அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து எந்த அறிவிப்பும் இல்லாததால் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர். கூட்டணியிலிருந்து வெளியேறிய டிடிவி, ஓ.பி.எஸ்.ஸை மீண்டும் சேர்க்க அமித் ஷா திட்டமிட்ட நிலையில் அதிமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஓ.பி.எஸ்., டி.டி.வி.யை மீண்டும் கூட்டணியில் சேர்க்க பாஜக முயற்சித்து வரும் நிலையில் அதிமுக பொதுக்குழுவில் அதிரடி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரனை தனித்தனியாக சந்தித்து பேசிய அண்ணாமலை டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார்.

அமித் ஷாவை சந்தித்து ஓ.பி.எஸ்., டி.டி.வி.யை மீண்டும் கூட்டணியில் சேர்ப்பது பற்றி அண்ணாமலை ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அமித் ஷாவை அண்ணாமலை சந்திக்க உள்ள நிலையில் அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடிக்கு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரிந்தவர்களை இணைக்கும் வகையில் அமித் ஷா பேசி வரும் நிலையில் அதை நிராகரிக்கும் வகையில் அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எடப்பாடி முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை கூட்டணியில் இணைய முடியாது என்று டிடிவி தினகரன் கூறியிருந்தார்.

டி.டி.வி. தினகரன் நிபந்தனையை நிராகரிக்கும் வகையில் எடப்பாடியே முதல்வர் வேட்பாளர் என்று அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கூட்டணியில் எந்தெந்த கட்சி இடம்பெற வேண்டும் என்று எடப்பாடியே முடிவு செய்வார் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பொதுக்குழு தீர்மானத்தால் கூட்டணியை விரிவுபடுத்த பாஜக மேற்கொண்டுள்ள முயற்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனிடையே துரோகிகளை வீழ்த்த உழைப்போம் என கே.பி.முனுசாமி பேசியதன் மூலம் பிரிந்து சென்றவர்களுக்கு மீண்டும் இடமில்லை என்பது உறுதியாகியுள்ளது.

நம்முடன் உறவாடுபவர்களே அதிமுகவை அழிக்க முயற்சிப்பதாக சி.வி.சண்முகம் பரபரப்பு குற்றம் சாட்டினார். சி.வி.சண்முகம் குற்றச்சாட்டால் அதிமுக-பாஜக கூட்டணியில் சலசலப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டது.