Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அகமதாபாத் விமான விபத்து: 87 உடல்கள் அடையாளம் கண்டுபிடிப்பு; விமானிகள் அறையின் குரல் பதிவுக் கருவி மீட்பு!

அகமதாபாத்: அகமதாபாத் விமான விபத்தில் பலியான 87 பயணிகளின் உடல் அடையாளம் காணப்பட்டது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் என்ற விமானம் கடந்த 12ம் தேதி லண்டன் புறப்பட்டது. விமானம் பறக்க தொடங்கிய 30 விநாடிகளிலேயே அங்கிருந்த மருத்துவ கல்லூரி விடுதி மீது விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிலிருந்த பயணிகள் விமான ஊழியர்கள், விமானிகள் உள்பட 241 பேர் பலியாகி விட்டனர்.

இந்த விமானத்தில் சென்ற குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் விபத்தில் உயிரிழந்தார். 11 ஏ என்ற இருக்கையில் பயணித்த விஸ்வாஸ் குமார் ரமேஷ் என்ற பயணி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விபத்தில் மருத்துவ விடுதி மாணவர்கள், அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் என மொத்தம் 270 பலியாகி விட்டனர். விமானம் தீப்பிடித்து எரிந்ததில் உடல்கள் கருகி இருப்பதால், டிஎன்ஏ(மரபணு) சோதனை மூலம் உடல்கள் அடையாளம் காணப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

இதுவரை டிஎன்ஏ பரிசோதனையில் 87 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதில் 41 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் விமானிகள் அறையின் குரல் பதிவுக் கருவி மீட்கப்பட்டிருப்பதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கடைசி நேரத்தில் விமானத்திற்கு என்ன நேர்ந்தது என்பது, விமானிகளின் உரையாடல் மூலம் தெரிய வரும் என்பதால், இந்த குரல் பதிவுக் கருவி மீட்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் பார்க்கப்படுகிறது.முன்னதாக, விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.