Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அதானி நிறுவன நிலக்கரி ஊழல் பற்றி விசாரணை: ராகுல் காந்தி

டெல்லி: பா.ஜ.க. ஆட்சியில் அதானி நிறுவனம் செய்த மாபெரும் நிலக்கரி ஊழல் அம்பலமாகியுள்ளது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அதானி நிலக்கரி இறக்குமதி ஊழல் மூலம் மோடியின் நண்பரான அதானி ஆயிரக்கணக்கான கோடிகளை கொள்ளையடித்துள்ளார். தரம் குறைந்த நிலக்கரியை 3 மடங்கு விலை உயர்த்தி விற்றதன் மூலம் கொள்ளை லாபம் அடித்துள்ளனர். அதானி நிறுவன நிலக்கரி இறக்குமதி ஊழல் சாமானியர்கள் கூடுதல் மின்கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டது. நிலக்கரி இறக்குமதி ஊழல் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக எத்தனை டெம்போக்களில் பணம் பெற்றார் மோடி? அதானி நிறுவன இறக்குமதி ஊழல் மீது சிபிஐ, அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்?. என கேள்வி எழுப்பிய ராகுல் பொதுமக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஒவ்வொரு ரூபாயும் மீட்கப்படும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.